Charu_Nivedita_1

கடந்த 19.11.15ம் தேதி அன்று, பாரிஸில் இருந்து சுற்சுறா என்பவர் எழுதியிருந்த கட்டுரையை, “எழுத்தாளர் சாருநிவேதிதாவின் பாரீஸ் பயங்கரவாதம்” என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.

அந்த கட்டுரையில்,, “படைப்பாள நண்பர்கள் அழைப்பின் பேரில் பாரிஸ் வந்த எழுத்தாளர் சாருநிவேதிதா, எங்களை படாதபாடுபடுத்திவிட்டார்” என்று சுற்சுறா குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து சாருநிவேதிதாவின் தரப்பை அறிய அவரை தொடர்புகொண்டோம். அவரது மொபைல் தொடர்ந்து சுவிட்ச் ஆப்- இல் இருந்தது. இதையடுத்து சாருவின் மெயில் ஐடியில் தகவல் தெரிவித்தோம்.

அதற்கு சாரு, பதில் அனஉப்பியிருக்கிறார். அதில், “என்னை அவன் இவன் என்று குறிப்பிட்டு ஆபாசமாக எழுதியிருக்கும் பதிவுகள் குறித்து நான் பதில் சொல்ல விரும்பவில்லை.  ஆளை விடுங்கள்…” என்று குறிப்பிட்டிருக்ிகறார்.

நமது மெயிலுக்கு பதில் அளித்து தனது தரப்பை வெளிப்படுத்திய சாருநிவேதிதாவுக்கு பத்திரிகை டாட் காம் இதழ் சார்பில் நன்றிகள்.

சாருநிவேதிதா பற்றி சுற்சுறா எழுதிய கட்டுரை லிங்க்:

 

http://patrikai.com/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/