anbumani.com
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூட்டணிக்கு வருமாறு திமுக., ரூ. 500 கோடி பேரம் நடந்ததாகவும், ஆனால் விஜயகாந்த் இதனை ஏற்கவில்லை என்றும் , வைகோ கூறியிருந்தார். இது தொடர்பாக இன்று பா.ம.க., முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாசிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு அவர் பதில் அளிக்கையில் ;500 கோடி ரூபாய் வாங்கியதாக பேரம் நடந்திருப்பதாக ஒரு கட்சி தலைவரே ( வைகோ ) தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் அளிப்போம். தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறினார்.