new30

வெள்ளப் பாதிப்புகள் பற்றி நடிகர்கள் வாயைத் திறக்கவில்லை என்ற குறை ரசிகப்பெருமக்களுக்கு இருக்கிறது. ஆனால் தமிழக வெள்ள சேதம் குறித்து தன்னிடம் நடிகர் ரஜினிகாந்த் கேட்டுத்தெரிந்து கொண்டார் எனக்கூறி, ரசிகர்கள் மனதில் லேசாக பால் வார்த்திருக்கிறார் காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன். மலேசியாவில் ரஜினியை சந்தித்தபோதுதான் இப்படி அக்கறையாக விசாரித்தாராம் ரஜினி.

ஆனாலும், “சில நடிகர்கள் படுக்கை, பாய் விரிப்பு என்று தம்மாத்துண்டு உதவி செய்துவிட்டு அதற்கு பெரும் புகழ் தேடுகிறார்கள்” என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.  ஆனால், “வெள்ள நிவாரணத்துக்கு நடிகர்கள் பெரிய அளவில் உதவினார்கள்” என்று பட்டியல் போடுகிறார்கள் சமூக வலைதலங்களில் பலர்.

நடிகர்கள்  அள்ளிக்கொடுத்த நிதி:  (இந்திய ரூபாயில்)

ரஜினி – ரூ.5 லட்சம், விஜய் – ரூ.5 லட்சம், விஷால் – ரூ. 15 லட்சம், சூர்யா – ரூ. 25 லட்சம், கார்த்தி – ரூ. 12.5 லட்சம், ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் – ரூ.12.5 லட்சம், சமந்தா – ரூ.10 லட்சம், காஜல் அகர்வால் – ரூ.5 லட்சம்!

இந்த பட்டியலை போட்டு, “இது பொய்யல்ல உண்மை. ஆனால் இவர்கள் தமிழகத்தில் தற்போது ஏற்பட்ட வெள்ள சேதத்துக்கு இந்த நிதியை அளிக்கவில்லை. கடந்த வருடம் ஹூட் ஹூட் புயலால் பாதிக்கப்பட்ட  ஆந்திர மக்களுக்கு இவர்கள் வாரி வழங்கிய நிதிதான் இந்த பட்டியல்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஹூம்.. என்னத்தை சொல்ல..!