சென்னை
இண்டிகோ விமானத்தில் காரணமின்றி அவச்ர கால கதவை திறக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று ஒரு இண்டிகோ விமானம் சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு164 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தபோது மேற்கு வங்காளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் திடீரென விமானத்தில் அவசர கால கதவை திறக்கும் பட்டனை அழுத்தி திறக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அந்த இளைஞரை சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாம் அவசர கால பட்டனை தவறுதலாக அழுத்தி விட்டதாகவும், தன்னை மன்னித்து விடுமாறும் கைதான இளைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.