விஜயகாந்த்
விஜயகாந்த்

மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டார் தே.மு.தி.க. தலைவரும் அதிரடி ஆக்சன் நடிகருமான “கேப்டன்” விஜயகாந்த்.

இன்று, சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ரத்த தான முகாமை தொடங்கி வைத்த விஜயகாந்த், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கோபப்பட்ட விஜகாந்த், ‘பத்திரிகைகாரங்களா நீங்க..த்தூ………’ எனக் காறித் துப்பினார்.

இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பொது இடங்களில் இப்படி அநாகரீகமாக, அத்துமீறி நடந்து கொள்வது விஜயகாந்திற்கு புதிதல்ல.

கடந்தாண்டு லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக டெல்லியில் அறிவிப்பேன் என்று சென்னையில் அறிவித்துவிட்டு டில்லி சென்றார். அங்கிருந்து திரும்பியவரிடம் விமான நிலையத்தில் வைத்து பேட்டி கண்டார்கள் செய்தியாளர்கள்.

அப்போது, தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் கோபமடைந்த விஜயகாந்த், “போய்யா..உனக்கு பதில் சொல்ல முடியாது” என்று தனது “ட்ரண்ட்” ஆன நாக்கை துறுத்தி எகிறினார்.

‘ஏர்போர்ட்’ பாலு என்ற செய்தியாளரை ‘நாய், நாய்’ என்று திட்டி, ‘நீங்களா எனக்கு சம்பளம் தர்றீங்க?’ என்று ஆத்திரமாக கேட்டார்.

இதைத் தொடர்ந்து விஜயகாந்துக்கு சம்பளம் கொடுக்கும் போராட்டம் நடத்தினார்கள் பத்திரிகையாளர்கள்.

இதே போல அடுத்த சம்பவமும் நடந்தது. விஜயகாந்த் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமர் மோடியை இந்தாண்டு ஏப்ரல் மாதம் சந்தித்தார்கள். . பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் டென்சன் ஆகி, “தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க…” என்று மிரட்டல் விடுத்தார்.

இது சட்டசபையில்..
இது சட்டசபையில்..

 

அதே நேரம் திடீரென சாந்த சொரூபியாகவும் மாறுவார். சில மாதங்களுக்கு முன்னர் ஆளுநர் ரோசய்யாவை சந்தித்துவிட்டு செய்தியாளரை சந்தித்த விஜயகாந்த் பேசினார். வழக்கம்போல புரியவில்லை. ஆகவே விளக்கமாக சொல்லும்படி பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார். அதற்கு விஜயாகந்த், “ என்ன கேட்டீங்க… பக்கத்துல வாங்க அடிக்க மாட்டேன்” என்று கூறி வெள்ளந்தியாக சிரித்தார்.

கட்சிக்காரர்களும் விஜயகாந்தை நெருங்கவே பயப்படுகிறார்கள். தர்மபுரியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது கட்சி வேட்பாளரை ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக அடித்து, அறைந்தார் விஜய்காந்த். இத்தனைக்கும், தவறு விஜயகாந்த் மீதுதான். தனது வேட்பாளரின் பெயரை மறந்து தவறாக பாண்டியன் என்று பேசினார் விஜயகாந்த். பதறிப்போன அந்த வேட்பாளர் தனது பெயர் பாண்டியன் அல்ல, பாஸ்கர் என்று சொன்னதற்காகத்தான் அத்தனை பேர் எதிரில் அவருக்கு கும்மாங்குத்துவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ராமநாதரபுரத்தில் பிஜேபி வேட்பாளர் குப்புராமுவை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது, தொண்டர் ஒருவர் குரல் எழுப்ப.. மேடையில் இருந்த விஜயகாந்த், “யாருடா அவன்.. வாடா.. நேர்ல வாடா..மோதிப்பார்ப்போம்” என்று ஓப்பன் மைக்கில் சவால்விட்டார்.

இது எம்.எல்.ஏவுக்கு..
இது எம்.எல்.ஏவுக்கு..

 

வெளிநாட்டிலும் இவரது கோபப்புகழ் பரவ ஆரம்பித்தது. மலேசியாவில் அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள முயன்ற ஷாஜகான் என்ற ரசிகருக்கு விட்டார் ஒரு பளார்!

கோபம் குறைவதற்காக, கடந்த ஆகஸ்ட் மாதம் விஸ்வாமித்திரர் கோவிலில் யாகம் செய்தார்.

பிறகு, கடந்த மாதம் சர்ச்சை சாமியார் ஜக்கி வாசுதேவின் ஈசா யோகா மையத்திலேயே ஒருவாரம் தங்கி யோகா பயிற்சி டுத்தார்.

“இப்போ மனசும் உடம்பும் பிரஸ்ஸ்ஸா இருக்கு” என்றவர், மறுநாளே,  பண்ருட்டி எம்எல்ஏ சிவக்கொழுந்துவை அடித்தார், வேன் ஓட்டுநருக்கு உதையும் கொடுத்தார். இதுவும் பலரும் பார்க்கவே நடந்தது.

இப்படி அடிக்கடி எகிறுகிறார்.. திடுமென பாசத்தோடு பேசுகிறார். என்ன ஆச்சு விஜயகாந்துக்கு என்ற வருத்தமான குழப்பம் நமக்கு. அதைத் தீர்த்துக்கொள்ள, மனநல மருத்துவர் சிவசுப்ரமணியம் அவர்களை நாடினோம். அவர் நமக்களித்த விளக்கத்தை கடந்த நவம்பர் 30ம் தேதி நமது patrikai.com இதழில் வெளியிட்டோம்.

அன்று அவர் கூறியதை இப்போது மறு பிரசுரம் செய்கிறோம்…. இன்றைய அவசர அவசியம் கருதி!

 

மனநல மருததுவர் டாக்டர் சிவசுப்ரமணியம்
மனநல மருததுவர் டாக்டர் சிவசுப்ரமணியம்

விஜயகாந்த மனநிலை மற்றும் தீர்வு குறித்து, மனநல மருத்துவர் சிவசுப்ரமணியன் கூறியது இதுதான்:

“தன்னைச் சுற்றி இருக்கும் பொதுக் கட்டுப்பாடுகளை மதித்து நடப்பவரே இயல்பான மனிதர்.  ஆனால் மது மயக்கத்தில் பலர், பிறரைப்பற்றி கவலைப்படாமல் நடந்துகொள்வார்கள். பிறரை அடிப்பார்கள், சிலரோ தங்களைத் தாங்களே அடித்துக்கொள்வதும் நடக்கும்.

இப்படி மது மயக்கம் இல்லாமல் ஒருவர் நடந்துகொள்கிறார் என்றால், அது பர்சனாலிடி டிஸ்ஆர்டர். இதை தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை.  (personality disorder) என்போம். எம்.டி.பி. – மேனிக் டிப்ரசிவ் சைக்கோஸில் (manic depressive psychosis) என்பதும் உண்டு.

பிறர் உணர்வுகளைப்பற்றி கவலைப்படாத தன்மை. தான் என்ன நினைக்கிறோமோ அதுதான் சரி. அதன்படி நடக்கவில்லை என்றால் உடனே கடுமையாக பேசுவது, அடிப்பது போன்ற குணம்.

அதே நேரத்தில் இதை ஒரு மனநோய் என்று சொல்லக்கூடாது. ஏனென்றால் என்னதான் ஆத்திரப்படுபவராக இருந்தாலும், துப்பாக்கி வைத்திருப்பவரை தாக்குவாரா.. அதே போல தனது வாழ்க்கைக்கு ஆதாரமாக இருப்பவரை.. அது பாஸ் ஆகவோ, மனைவியாகவோ இருக்கட்டும்.. தாக்குவாரா?  ஆக, தன் உணர்வு இருக்கிறது. அதே நேரம், தான் மதிக்காதவரை எடுத்தெறிந்து பேசும், தாக்கும் போக்கு இருக்கிறது.

இந்த குணத்தைப் போக்க, பாதிக்கப்பட்டவர்தான் முயற்சி எடுக்க வேண்டும். இதற்கு யோகா, தியானம் போன்றவை மட்டுமே தீர்வாகாது. உரிய மருத்துவரிடம் முறையாக சிகிச்சை பெற வேண்டும். அதற்கு துணையாக யோகாவோ, தியானமோ இருக்கலாம்” என்றார்.

முந்தைய நமது கட்டுரையில் குறிப்பிட்டதையே மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அது…

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத மிகச் சில தலைவர்களுள் விஜகாந்த் ஒருவர்.  பொது இடத்தில் ஆத்திரப்டும் தனது குறையை மட்டும் விலக்கிவிட்டு, அவர் முழு தகுதியுள்ள தலைவராக வாழ்த்துகிறோம்!

இந்த கட்டுரையை, விஜயகாந்த் குடும்பத்தினரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லவும் முயற்சிக்கிறோம்.

  • டி.வி.எஸ். சோமு