காஷ்மீர்
ஏற்கனவே மூடிய பாக்லிகார் அணையை கனமழை காரணமாக திறந்ததன் மூலம் இந்தியா பாகிஸ்தானுக்கு மீண்டும் தண்ணீர் திறந்துள்ளது.
கடந்த மாதம் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்திருந்தது.
எனவே செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் மற்றும் சலால் அணைகளின் மதகுகள் அடைக்கப்பட்டன. இதனால் பாகிச்தானுக்கு செல்லும் சிந்து நதி நீர் நிறுத்தப்பட்டது
அண்மையில் ஜம்மு காஷ்மீரின் ரம்பன் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பாக்லிஹார் மற்றும் சலால் அணைகள் நிரம்பி வழிகின்றன.
எனவே வேறு வழியில்லாமல் பாக்லிஹார் மற்றும் சலால் அணை மதகுகள் திறக்கப்பட்டுள்ளதால் பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியில் தண்ணீர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.