Monsoon_1472561f

சென்னை : கடந்த இரு வாரங்களாக தமிழகத்தில் பெய்துவரும் மழை, இரு நாட்களுக்கு முன் சற்று குறைந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கன மழை பெய்தது.

இதற்கிடையே மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. “தென் மேற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய இலங்கையில் நிலை கொண்டுள்ள புதிதாக காற்றழுத்தத் தாழ்வு நிலையால், தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும்” என வானிலை ஆய்வு மையம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.