பாலிமர் டிவி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைகோ இடையிலேயே வெளியேறினார். அவரிடம் நிகழ்ச்சி நெறியாளர், “தே.மு.தி.கவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க 500 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது என்று நீங்கள் குற்றம் சாட்டினீர்கள். அதே நேரம், மக்கள் நலக்கூட்டணி என்று தனி அணியாக தேர்தலில் நிற்க ஜெயலலிதா உங்களுக்கு 1500 கோடி.. ” என்று நிகழ்ச்சி நெறியாளர் கேள்வியை முடிக்கும் முன்பே வைகோ எழுந்து “பேட்டியை முடித்துக்கொள்கிறேன்” என்று கோபமாக சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார்.
நிகழ்ச்சி நெறியாளர், “நான் இன்னும் கேள்வியை முடிக்கவில்லை.. முழு கேள்வியையும் கேட்டுவிடுங்கள்” என்று சொன்னதையும் வைகோ பொருட்படுத்தாமல் வெளியேறிவிட்டார்.
https://www.facebook.com/patrikaidotcom/videos/1530528130575647/