uma2

ஸ்ரீ யை சந்தித்து பேசியதில் இருந்து நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் திணறுகிறாள் நாயகி. கை விவகாரம் எப்படி பத்மினிக்கு தெரிந்தது !,, பீச்ல அபிநயாவை மீட் பண்ணியதை யார் சொல்லியிருப்பா !? நாயகனை பற்றிய குழப்பம் இப்படி எதற்கும் பதிலின்றி தடுமாறுகிறாள். ஸ்ரீ குடும்பத்தார் தன்னை பற்றி தவறாக நினைத்திருப்பார்களே என்றும் நினைத்து வருந்துகிறாள்.

ஆனால் ஸ்ரீ யோ வேறு ஒரு id மூலம் நாயகனுடனான நட்பை தொடருகிறாள். CID வேலையை தொடர்ந்து செய்து வந்த பத்மினி இந்த id யையும் மோப்பம் பிடித்து விட பிரச்சனை திசை மாறுகிறது.

ஸ்ரீயிடம் முதலில் பேசாமல் நேராக ஸ்ரீயின் அம்மாவிடமே பேசுகிறார் பத்மினி.இந்த முறை ஸ்ரீயின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் சொல்கிறார். கூடவே சில சந்தேகங்களையும் சேர்த்து கிளப்பிவிட…
ஸ்ரீயின் அம்மா ஸ்ரீயிடம் புலம்ப, நாயகனிடமே சொல்லி புலம்புகிறாள் ஸ்ரீ. நாயகனோ
“உங்க aundy க்கு உன்ன பார்த்து பொறாமைப்படுறாங்க ராசாத்தி” என்று சொல்ல எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவதாய் அமைகிறது.
“இனி எப்படி பேசமுடியும் ராசா ”
“தெரியல ”
” என்னால உன்ன block பண்ணமுடியல கஷ்டமா இருக்கு அம்மா பேச்சையும் மீறமுடியல நீயே block பண்ணிடு pls ” என்று புலம்பி அழுவதை பார்த்து.
” சரி feel பண்ணாத எனக்கும் கஷ்டமாதான் இருக்கு ஆனாலும் நானே block பண்ணிடுறேன் வேற என்ன செய்ய முடியும் ” நாயகனும் ரொம்ப feel பண்ணி block பண்றான் அந்த id யை.

நாயகனிடம் பேசமுடியாமல் தவிக்கும் ஸ்ரீக்கு நாயகியின் உதவி தேவைப்பட நாயகிக்கு போன் பண்றா ஸ்ரீ.
“ஹலோ”
“Oye என்ன வீட்டுப்பக்கமே ஆளை காணோம்”
“சொல்லு ஸ்ரீ ”
” எனக்கு உன்ன பாக்கணும் ”
” என்ன ஸ்ரீ ஏன் உன்னோட வாய்ஸ் சரியில்ல !? உடம்பு எதுவும் சரியில்லையா !?” ஸ்ரீயின் குரலில் வித்தியாசம் தெரிந்ததாலும், ஏற்கனவே அறுவை சிகிச்சை முடிந்து சிலநாட்களே ஆகியிருந்ததாலும் இயல்பாகவே ஒரு பதட்டத்தோடு கேட்கிறாள் நாயகி.
“நீ வீட்டுக்கு வா சொல்றேன் ” என்கிறாள் ஸ்ரீ.
தோழியை காண புறப்படுகிறாள் நாயகி.
அங்கே சோர்வாய் காணப்படும் ஸ்ரீயிடம்.
” என்னாச்சு ஸ்ரீ !?” என்று கேட்டவுடன் படப்படவென பொரிந்து தள்ளுகிறாள் ஸ்ரீ.
கேட்டதும் கோவப்படுகிறாள் நாயகி.
” என்ன பொம்பள இது ! பொண்ணுமாதிரி நீ உன்னை போய் ச்ச… ”
” ராசா சொன்னது சரிதான் அவளுக்கு என்னை பார்த்து பொறாமை இதையெல்லாம் என் சொந்தம்னு சொல்லவே அசிங்கமா இருக்கு இந்த வயசுல மகன் வயசுல இருக்கும் ஒருத்தன் மேல… ” இடைமறிக்கிறாள் நாயகி.
” என்ன ஸ்ரீ இப்படி பேசுறா நீ !? அவங்க உனக்கு அம்மா மாதிரி ”
” நீ வேற கம்முன்னு இரு உனக்கு ஒன்னும் தெரியாது. அவங்களே இதை என்கிட்ட சொல்லிடாங்க ” அதிர்ச்சி அடைகிறாள் நாயகி.
” என்ன ஸ்ரீ சொல்ற !? அவங்களே சொன்னாங்களா !? என்ன சொன்னாங்க !?” கேட்கும் நாயகியிடம் ஸ்ரீ.
” கொஞ்சநாளைக்கு முன்னாடி அவங்க சென்னை வந்தாங்க தெரியுமா !?” என சொல்ல ஆரம்பிக்கிறாள் ஸ்ரீ

(அடுத்த அத்தியாயம்… வரும் சனிக்கிழமை அன்று..)