Singapore Open champ Sai Praneeth has quality but he needs consistency: Pullela Gopichand

 

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் சாய் ப்ரணீத் சாம்பியன் பட்டம் வென்றார்.

இறுதிப்போட்டியில் சக வீரர் ஸ்ரீகாந்த்-தை எதிர்த்து சாய் ப்ரணீத் விளையாடினார். இதில் முதல் செட்டை 21-17 என்ற கணக்கில் ஸ்ரீகாந்த் கைப்பற்றினார். அதேபோல் இரண்டாவது செட்டை சாய் ப்ரணீத் 21-17 என்ற கணக்கில் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் ப்ரணீத், அந்த செட்டை 21-12 என்ற கைப்பற்றி, பட்டத்தை தமதாக்கினார். இதன் மூலம் ஹைதராபாத்தை சேர்ந்த 24 வயது வீரரான சாய் ப்ரணீத், சூப்பர் சீரிஸ் போட்டியில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.