sa

டோக்கியோ:

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

ஜப்பானில் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்துவருகிறது. இதில் இன்று தரவரிசையில் இரண்டாம் நிலை வீராங்கனையான சாய்னா, தரவரிசையில் 18-ஆவது இடத்தில் உள்ள ஜப்பானின் மிதானியை எதிர்த்து விளையாடினார்.

சாய்னாதான் வெற்றி பெறுவார் என்று எல்லோரும் கணித்திருந்தார்கள். ஆனால் ஆரம்பம் முதலே மிதானி முன்னிலையில் இருந்தார். 40 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் 13-21, 16-21 என்ற நேர் செட்களில் மிதானி வென்றார். சாய்னா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.