john pennycuick

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி,மேற்கு நோக்கி பாய்ந்து கடலில் வீணாக சென்று கலப்பதை பார்த்தராமநாதபுரம் மன்னர் சேதுபதி 1798-ம் ஆண்டு முல்லையாறு,பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர்முழுவதையும் மதுரை ராமநாதபுரம் பகுதிகளுக்கு கொண்டுவர திட்டமிட்டார்.இதற்காக முத்து இருளப்பபிள்ளைதலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்த குழு தங்கி காடுகளைஅழித்து, அணை கட்டும் இடத்தை தேர்வு செய்து மதிப்பீடு தயார் செய்தது. நிதி வசதியின்றி திட்டத்தை நிறைவேற்றமுடியவில்லை என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்து வந்த ஆங்கிலேய அரசு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.இந்தியாவுக்குராணுவபொறியாளராக[எஞ்ஜினீயர்]வந்த கர்னல் ஜான் பென்னிகுயிக் அணை கட்டுவதற்கு பெரும் முயற்சி எடுத்து ஆங்கிலஅரசின் அனுமதியையும் பெற்றார். ரூ75 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 1893-ம் ஆண்டு அணை கட்டும் பணி தொடங்கப்பட்டது.அடர்ந்த காடு,விஷப்பூச்சிகள்,காட்டு மிருகங்கள்,கடும் மழை போன்ற இடையூறுகளை சமாளித்து அணையைகட்டிக்கொண்டிருந்த பொழுது தொடர் மழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளதில் பாதி கட்டப்பட்டிருந்தஅணை அடித்துச் செல்லப்பட்டது.இதனால் பெரிதும் மனமுடைந்தார் பென்னி குயிக். உடைந்த அணையை மீண்டும்கட்ட நிதி ஒதுக்க ஆங்கில அரசு மறுத்துவிட்டது.இதனால் சிறிதும் மனம் தளராத பென்னி குயிக் இங்கிலாந்துக்குதிரும்பிச் சென்று அவரின் குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் விற்று கிடைத்த பணத்தில் முல்லை பெரியாறுஅணையை கட்டி முடித்தார்.
முல்லை பெரியாறு அணையால் தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகியமாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.மேலும் மதுரை, ஆண்டிப்பட்டி,உசிலம்பட்டி, சேடப்பட்டி பகுதிகளுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில்,ராணுவ பணி பொறியாளராக தமிழ்நாட்டுக்கு வந்த பென்னி குயிக், இந்த நாட்டை ஒரு அடிமை நாடாக கருதாமல், தன்உற்றார்- உறவினர் வாழும் பூமிபோல கருதி, மழையை நம்பி மானாவாரி சாகுபடி செய்யும் மக்களின்விவசாயத்துக்காக, அவர்களின் குடிநீர் வசதிக்காக அரசாங்கம் நிதி உதவி செய்ய மறுத்த நிலையிலும், தன்சொத்துக்களையெல்லாம் விற்று, ஏன் மனைவியின் நகைகளைக்கூட விற்று `முல்லைப் பெரியாறு’ அணையைகட்டினார்.
வறண்டு கிடந்த தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களுக்கு வாழ்வாதாரமான நீர் ஆதாரத்தை ஏற்படுத்தி கொடுத்தபென்னிகுயிக்கை தென் மாவட்ட மக்கள் குறிப்பாக தேனி மாவட்ட மக்கள் கடவுளாக வணங்குகின்றனர்.அங்குள்ள சிலகோயில்களில் அவரின் உருவப்படமும் வைக்கப் பட்டுள்ளது. உழவுப்பணி ஆரம்பிக்கும் பொழுதும்,அறுவடையின்பொழுதும் அவரின் படத்தை வணங்கிவிட்டு வேலையை ஆரம்பிக்கின்றனர்.பென்னிகுயிக் பெயரில்அம்மாவட்டங்களில் பேரவைகளும் அமைக்கப் பட்டுள்ளது.தங்கள் வாழ்வாதாரத்திற்குவழி வகுத்த பென்னிகுயிக்கின்பெயரை தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி தங்கள்நன்றியை இன்றும் தமிழர்கள் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.