அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தடைக்கான போராடத்தை, தமிழக இளைஞர்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

இவர்களது போராட்டத்தை ஆதரிப்பதாக கூறி கார்த்திக் சுப்புராஜ், ஜிவி பிரகாஷ், இயக்குநர் அமீர் உள்ளிட்ட சில திரை பிரபலங்கள் வந்து சென்றுகொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சியைச் சேரந்த சிலரும் வந்து  செல்கிறார்கள்.

ஆனால் போராட்ட இளைஞர்கள், “எந்த பிரபலமும் எங்களைச் சந்திக்க வரவேண்டாம். குறிப்பாக அரசியல் பிரமுகர்கள் வரவேண்டாம். தன்னெழுச்சியாக நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். இதன் சாதக பாதங்களை நாங்களே அனுபவித்துக்கொள்கிறோம்” என்று உறுதியுடன் தெரிவித்து வருகிறார்கள்.

ஆனாலும் திரைபிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் சிலர் போராட்டக் களத்துக்கு வந்து, பேசிச்செல்கிறார்கள்.